2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோவில் குளத்தில் வீழ்ந்த சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                          (ஜிப்ரான்,எஸ்.மாறன்)
அம்பாறை, பொத்துவில் பகுதியிலுள்ள உகந்தை கோவில் குளத்தில் வீழ்ந்த 13 வயது சிறுவனொருவன் பனமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பு, களுதாவளை விபுலானந்தா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ராஜ்குமார் நிவித்திகரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நேற்று சனிக்கிழமை காலை இப்பாடசாலையைச் சேர்ந்த 93 மாணவர்கள் உகந்தைக்கு கல்விச் சுற்றுலா சென்றதாகவும் விளையாடிக்கொண்டிருந்தபோது இம்மாணவன் குளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .