2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மரத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்து வான் சேதம்

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீதி ஒன்றில்  மரத்தில் பொருத்தப்பட்ட குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாரிய சத்தத்துடன்  வெடித்ததில் வான் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

அக்கரைப்பற்று 8ஆம் பிரிவு பழைய வைத்தியசாலை வீதியில் கோளாவில் மாரியம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீதியின் வளைவில் உள்ள வேளாண்மைக் காணி ஒன்றில் தென்னைமரம் ஒன்றில் பொருத்தப்பட்ட குண்டு இரவு 10.40 மணியளவில் திடீரென வெடித்துள்ளது.

இதன்போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனமொன்று சேதமடைந்துள்ளது.  எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணையின் மூலம் மரத்தில் பொருத்தப்பட்ட குண்டே வெடித்துள்ளது என கண்டுபிடித்ததுடன் அதன் அருகே உள்ள பனைமரத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .