2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கியமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க ஆவணம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனுல சமல் பெரேரா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள பட்டதாரிகளை சந்தித்து அவர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடி அரசு நியமனம் வழங்கும் என உறுதிமொழி வழங்கினோம்.

அவர்களுக்கு எமது அரசு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கி அவர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தந்தமைக்கு சங்கம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

வடக்கு, கிழக்கு பகுதியில் எமது சங்கத்தின் சார்பில் அதிகளவான பட்டதாரிகள் கடந்த தேர்தல் காலங்களில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் அரசின் வெற்றிக்காக உழைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எமது சங்கத்தின் பிரதிநிதிகள் பட்டதாரிகளுக்கு அரச துறையில் தொழில் வழங்க வேண்டும் என்று பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிரகாரம் எமது கோரிக்கையை நிறைவேற்றியமைக்கும் சங்கம் நன்றி தெரிவிக்கின்றது.

சுதந்திர பட்டதாரிகள் சங்கம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க எடுத்த முயற்சியானது நாட்டின் அபிவிருத்திக்கு பட்டதாரி பயிலுனர்களால் சிறந்த முறையில் பங்களிப்பு செய்ய முடியும்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .