2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம் மக்களின் மனச்சாட்சி: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 ஜூலை 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


"முஸ்லிம் காங்கிரஸ் என்பது அரசாங்கத்திற்குள்ளே இருக்கின்ற, முஸ்லிம் மக்களின் மனச்சாட்சி. எங்களுடைய மனச்சாட்சிக்கு ஒத்தவகையில் தான் தீர்மானங்களை எடுக்க முடியும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம்களுடைய தனித்துவமான இயக்கம் என்ற அடிப்படையில் எங்களுடைய தனித்துவத்தை எந்த அடிப்படையிலும் அடகு வைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராகமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் தனது கட்சியின் வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு எங்களின் தனித்துவத்தினை பேணுகின்ற சிறப்பான முடிவுக்கு வந்துள்ளது.
இந்த முடிவின் பின்னணியில் தேர்தல் மூலமாக மக்களின் ஆணையை பெற்றவர்களாக ஒரு பலமான நிலையில் கிழக்கில் சிறுபான்மை இனங்களை கௌரவமாக நடத்துகின்ற ஆட்சியை உருவாக்கின்ற முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

எங்களுடைய இந்த முடிவினை மக்கள் எல்லோரும் பூரணமாக அங்கீகரித்துள்ளனர். இந்த தேர்தல் மூலமாக  மக்கள் ஆணையை வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவோடு நேற்று இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையின் பிறகு சுமுகமாக நாங்கள் தனித்துக் கேட்பதனை அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்கின்ற பெரும்பான்மை கிடைக்காது என்பது யதார்த்தபூர்வமான அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அதனை அடிப்படையாக வைத்துதான் வன்முறைகள் வெடித்து விடும் என்ற ஆபத்து இருக்கின்றது.

அதனை தவிர்க்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். தேர்தலுக்கு பிறகு கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்கள் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே கிழக்கிலேயே மூவின மக்களின் இன ஐக்கியதோடு ஒருமித்து ஆட்சியமைக்கின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழும் என்பது திண்ணம்" என்றார்.
 


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 19 July 2012 05:02 PM

    உங்கள் கருத்து உண்மை, ஆனாலும் தேர்தல் முடிவை அடுத்து அரசுக்கு முண்டுகொடுத்து ஆட்சியை அமைப்பதற்கு உத்தரவாதம் கொடுக்கமாட்டீர்கள் என்று உத்தரவாதம் தரமுடியுமா? அந்த நிலைமையில் மந்திரி பதவிகளை காப்பதற்காக மக்களின் மனசாட்சி விலை போகாது தானே?

    Reply : 0       0

    nallavan Thursday, 19 July 2012 05:11 PM

    சூப்பர் தலைவா.......... இறைவன் என்றும் நமக்கு உதவுவான்............

    Reply : 0       0

    kiyas Thursday, 19 July 2012 08:00 PM

    நீங்கள் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவு. உங்கள் முடிவுக்கு என்றும் மக்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள்..

    Reply : 0       0

    ramalan Friday, 20 July 2012 01:08 AM

    ஐயா மனசாட்சிர கருத்து உங்களுக்கு தெரியுமா? எத்தின முஸ்லிம் சகோரதருக்கு இது வரையில கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றி இருக்கிங்க சார்? உங்கட எல்லா சிந்தனையும் அல்லா அறிவான் சார்.

    Reply : 0       0

    jesmin Friday, 20 July 2012 03:45 AM

    அம்பாரையில் ஒரு ஆசனத்தை கூட்டித் தந்து இருந்தால் உங்களது மனச்சாட்சி எங்கே போயிருக்கும்?

    Reply : 0       0

    S.Sinasudeen Friday, 20 July 2012 04:49 AM

    சூப்பர் தலைவா.......... இறைவன் என்றும் நமக்கு உதவுவான்..

    Reply : 0       0

    jesmin Friday, 20 July 2012 07:09 AM

    கிழக்கு மாகானத்திற்கான ஆட்சியை நீங்கள் தீர்மானிக்கும் போது, மத்தியில் உள்ள அமைச்சரவையில் உங்களது பதவிகளை மஹிந்த ராசா காலி பன்னினால் மனசாட்சி என்ன சொல்லுமோ?

    Reply : 0       0

    sarraj Friday, 20 July 2012 08:54 AM

    போகப் போக தெரியும்.

    Reply : 0       0

    Najeeb Friday, 20 July 2012 09:35 AM

    தலைவா வாழ்க

    Reply : 0       0

    si mufeen Friday, 20 July 2012 04:33 PM

    நண்பரே நீங்கள்தான் சரியாக முஸ்லீம் தலைகள புரிந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

    Reply : 0       0

    si mufeen Friday, 20 July 2012 04:59 PM

    மக்களின் மனத எப்படி கவரனும் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும்.

    Reply : 0       0

    abdula Saturday, 21 July 2012 04:20 AM

    என்றும் எப்போதும் எங்கும் இறைவன் துணையுடன் வெற்றி நிச்சயம் முஸ்லீம் காங்கிரஸ். வாழ்க நலம்பெற்று நீடூழி காலம்.

    Reply : 0       0

    vaasahan Saturday, 21 July 2012 09:10 AM

    நல்ல முடிவுகளை யார் எடுத்தாலும் மக்களால் வரவேற்கப்படும். அரசியல் குறுக்கு மூளைகல் குறுக்கால் சிந்தித்து லாப நஷ்டக் கணக்குப் போடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .