2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தினை முன்னிட்டு நடமாடும் சேவைகள்

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (அப்துல் அஸீஸ் )
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தை முன்னிட்டு பொத்துவில், கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் முன்னோடி நடமாடும் சேவை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்படி பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1,2,3,4,5,15,18,19 ஆகியவற்றிற்கான நடமாடும் சேவை இன்று பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

9,10, 11,12, 13,14,16,17 ஆகிய பிரிவுகளுக்கான நடமாடும் சேவை பொத்துவில் அல்- கலாம் வித்தியாலயத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதுடன் 6,7,8,20,21,26,27 ஆகிய பிரிவுகளுக்கு 26ஆம் திகதி பொத்துவில் மத்திய கல்லூரியிலும், 22,23,24,25 ஆகிய பிரிவுகளுக்கு கோமாரி கத்தோலிக்க ஆலய மண்டபத்தில் 28ஆம் திகதியும் இடம்பெற உள்ளது.

இதேபோன்று கல்முனை பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவனை 1, பெரிய நீலாவனை 2, பெரிய நீலாவனை 2(மு.த.பி.) ஆகிய பிரிவுகளுக்கு 26ஆம் திகதி புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்திலும், இஸ்லாமபாத் பிரிவுக்கு 28ஆம் திகதி இஸ்லாமபாத் பல்தேவை கட்டிடத்திலும், பிரிவுகளான மருதமுனை 4,5,6 ஆகியவற்றிற்கு 31ஆம் திகதி மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்திலும்,  பிரிவுகளான நற்பிட்டிமுனை 4,5 ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயத்திலும்,  பிரிவுகளான நற்பிட்டிமுனை 1,2,3 ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திலும், பிரிவுகளான கல்முனை 3, கல்முனைக்குடி 1,2,3,4,5, ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 7ஆம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்திலும், பிரிவுகளான கல்முனைக்குடி 6,7,8,9 ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 9ஆம் திகதி கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திலும், பிரிவுகளான கல்முனைக்குடி 10,11,12,13,14 ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 11ஆம் திகதி கல்முனை அல்-மிஸ்பா மகா வித்தியாலயத்திலும்,  பிரிவுகளான மருதமுனை 2,3 ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 7ஆம் திகதி மருதமுனை அல்-மனார் ஆரம்பப்பிரிவு பாடசாலையிலும் இடம்பெற உள்ளது.

மேற்படி முன்னோடி நடமாடும் சேவைகள் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் ஆகியோர்களின் மேற்பார்வையில் இடம்பெற உள்ளதாக பொத்துவில், கல்முனை பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .