2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கபே அமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்; (கபே) அம்பாறை மாவட்டத்திற்கான அலுவலக திறப்பு விழாவும், மாகாணசபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.ஜே.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கிழக்கு மாகாண பிரதம இணைப்பாளர் ஏ.மனாஸ் மக்கீன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .