2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் மாநகரசபை உழவு இயந்திரம் தடுத்து வைப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)


சட்டவிரோதமாக கடல் மண் ஏற்றிச்சென்ற கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரமொன்றை கடற்கரை பாதுகாப்பு அதிகாரியொருவர் கைப்பற்றியுள்ளார்.

இன்று நண்பகல் சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியால் கடல் மண்னை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான மேற்படி உழவு இயந்திரத்தை அவ்விடத்திற்கு வருகை அம்பாறை மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள அதிகாரி எம்.ஐ.எம்.ஜெஸர் கைப்பற்றியதுடன் அதனை கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள அதிகாரி எம்.ஐ.எம்.ஜெஸர்,

இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்று வந்ததாகவும், இன்று தனக்குக் கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று உழவு இயந்திரத்தைக் கைப்பற்றியதாகவும் கூறினார்.

2011ஆம் ஆண்டு 49ஆம் இலக்க கரையோரம் பேணும் திருத்தச்சட்டத்தின் கீழ் வீட்டில் கடல் மண்ணை சேமித்து வைத்திருக்கும் நபர்களையும் கைது செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீரா சாஹிப்பிடம் கேட்டபோது, "கல்முனை பொது நூலகத்திற்கு பின்னால் நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதாக பொதுச்சுகாதார அதிகாரியினால் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கு மணல் நிறைத்து சூழலை சீராக்குமாறு தொழில்நுட்ப உத்தியோகஸ்தருக்கு உத்தரவிட்டிருந்தேன்.
ஆனால் மணல் கொண்டுவருவதற்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் கடற்கரையிலிருந்து மணல் ஏற்றிவந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்கிறேன்" எனத் தெரிவித்தார்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .