2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த பொலிஸ் நடமாடும் சேவை இன்று சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில நடைபெற்றது.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்னூன் டுல், கல்முனை பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பு பொலிஸ் உத்தியோகஸ்தர் வசந்த குமார, மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பாதியா ஜயசிங்க, கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்ன தேரர், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கிராம சேவக பொறுப்பு நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.எஸ்.நழீர், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் ஏ.பி.முஜீன், சாய்ந்தமருது மத்தியஸ்தர் குழாம் தலைவர் அலியார் முஸம்மில் உட்பட பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் முன்னோடி பரீட்சையில் திறமையினை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், சேவையின் போது மரணித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள், சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கான அடையாள அட்டை என்பன வழங்கப்பட்டதோடு பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .