2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (எஸ்.மாறன்)
அம்பாறை தமண பிரதேசத்தில் ஒன்றரைக் கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைபொருளுடன்  கைது செய்யப்பட்ட நபரை 10 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாரை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வீதியால் சென்று கொண்டிருந்த  பொலிஸாரின் வாகனத்தை கண்டு மேற்படி நபர் பதற்றமடைந்ததுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் குறித்த நபரின் பையை சோதனையிட்டபோது  ஒன்றரை கிலோகிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபரை நேற்று திங்கட்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆயர்படுத்தியபோது இவரை 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் என தமண பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .