2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை: அதாவுல்லா

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று திங்கட்ழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை பிச்சைக்காரனின் காலில் ஏற்பட்ட புண்ணை போன்று முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது போல், கிழக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்ட முடியாது. இங்கு மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து கிழக்கு மக்களுக்கு செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்லில் முஸ்லிம் காங்கிரஸின் சகோதரர் ஹஸன் அலி போன்றவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆணை தாருங்கள் என்று கோரினர். இத்தேர்தலிலும் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளது.

இரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸின்  போட்டியிடும் வேட்பாளகளுக்கு தெரியாது. எனினும் இத்திட்டத்தை உயர் மட்ட உறுப்பினர்கள் அறிவார்கள். இது பெரியதோர் வியாபாரமாகும். இந்த வியாபாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது.

யுத்த பயங்கரவாதத்தின் போது வைத்தியசாலைகள் மீது கூட மக்களிடைய சந்தேகங்கள் எழுந்ததுடன் பயமும் இருந்தது வந்தன.
இந்த நிலை இன்று  இல்லை. அது மாறி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வைத்தியசாலைகள் பொதுவானவை. அது எல்லா இனங்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறன.

முன்னொரு காலத்தில் எமது வைத்திய தேவைக்காக மட்டக்களப்புக்கும் பதுளைக்கும் செல்ல வேண்டியிருந்தது. இன்று ஒவ்வொரு ஊரிலும் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  இவ்வைத்தியசாலைக்கு  ஒதுக்க வேண்டியதை உரியவர்கள் ஒதுக்க வேண்டும் அல்லது கொடுப்பவர்களை கொடுக்க விட வேண்டும்" என்றார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • avvak kuddy Wednesday, 08 August 2012 09:13 AM

    ஏன் மாஸ்டர் இவ்வளவு தாமதம்?

    Reply : 0       0

    Maattrem Saturday, 11 August 2012 03:31 PM

    அவர் வாய் திறந்து எதயாவது பேசினால்தானே சமூகத்தில் கிளறல் ஏட்படும். அவ்வாறு எதைச்சொன்னார். வாயே திற‌க்க‌கலயே?

    Reply : 0       0

    samaz Saturday, 11 August 2012 07:40 AM

    அதாஉல்லாஹ்வின் தலைமைத்துவம் நிதானமானது. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பேகின்ற தலைமைத்துவம் அல்ல‌.

    Reply : 0       0

    nalanvirumbi Friday, 10 August 2012 02:42 PM

    அரசியல் அதிகாரம் அல்லாஹ்வின் அருளால் உங்களுக்குக் கிடைத்தது. இது சுகபோகம் அனுபவிப்பதற்ககல்ல‌, இதில் செய்யும் அனைத்துக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேன்டும்.

    Reply : 0       0

    vaasahan Thursday, 09 August 2012 06:06 AM

    முன்னர் போல் பேசாமலேயே இருந்திருக்கலாம். என்ன செய்வது. எதயாவது பேசித்தான் ஆக வேண்டும் என்ற அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தம் வந்திருக்கு. சரிவின் அடயாளமா?

    Reply : 0       0

    samsudeen Thursday, 09 August 2012 03:43 AM

    முஸ்லிம்கள் என்னே இளித்த வாயர்களா நீங்கள் சொல்வதையெல்லாம் செவிமடுக்க.
    நாட்டில் ஒரு போதும் இல்லாத அட்டகாசங்கள் இன்று முஸ்லிம்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. எல்லாம் வல்ல இறைவன் மறுமையில் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாகப்போகின்றது?

    Reply : 0       0

    sulaiman Wednesday, 08 August 2012 01:19 PM

    ஹக்கிம் அகில இலங்கை தலைவர் நிரூபித்துவிட்டார்.

    Reply : 0       0

    sulaiman Wednesday, 08 August 2012 11:21 AM

    அப்படியென்றால் ராஜகிரிய பள்ளிக்கு நடந்தது?

    Reply : 0       0

    niyas Wednesday, 08 August 2012 10:46 AM

    இப்படித்தான் சொல்லுவார். இல்லாவிட்டால் பதவி போகும் பட்டம் போகும். அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகவேன்டும் மஹிந்தவிடம் அல்ல.

    Reply : 0       0

    A.Riyal Wednesday, 08 August 2012 10:45 AM

    ரமலான்.. அதாவுல்லாவா மறைந்த தலைவர் அஸ்ரபின் வழியில் செல்கிறார்.....

    Reply : 0       0

    VAYIS Wednesday, 08 August 2012 10:43 AM

    அமைச்சர் அதாவுல்லா அவர்களுக்கு இப்போது தான் நேரம் கிடைத்து இருக்கின்றது போல பள்ளி வாசல் விடயம் பற்றி பேசுவதற்கு.

    Reply : 0       0

    mi.mahir Wednesday, 08 August 2012 10:20 AM

    அதுதான் உண்மை. தலைவர்கள் அவசரமும் ஆவேசமும் படக்கூடாது. நிதானமாக சிந்திக்க வேண்டும். நாட்டின் அரசியல் நிலைவரம் கடந்தகால அனுபவம் எல்லாம் கவனத்தில் கொண்டுதான் சிறுபான்மையான முஸ்லிம்களாகிய நம்மை வழி கொண்டு செல்ல வேண்டும். இதுதான் மறைந்த நம் தலைவர் அஸ்ரப் சாணக்கியம் அது இப்போது உள்ளவர்களில் அதாவுல்லாஹ்விடம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ் (எல்லாம் இறைவன் நாடியவாரு நடக்கும் இன்ஸாஅல்லா)

    Reply : 0       0

    Razak Wednesday, 08 August 2012 09:44 AM

    இந்த கருத்தை படிக்கும் ஒவ்வொருவரும் சற்று சிந்திக்க வேன்டும். ஹக்கிம் கூறியதாவது இன்ரு காவி உடை பயங்கரவாதம் நமது புனிதஸ்தலமான மஜ்லீஸ்மீது பல இடங்களில் பல்வேறு விதமாக உருவெடுத்து உள்ளது என்பதைதான் இதை அதாஉல்லா ஏற்று கொள்கிராரா அல்லது மறுக்கிறாரா அப்படி மறுத்தால் எதற்காக மஜ்லீஸ்களுக்கு பாதுகாப்பு வழங்க வேன்டும் என்பதுதான் எனது கேள்வி?

    Reply : 0       0

    farsath Wednesday, 08 August 2012 09:26 AM

    முஸ்லிம்களுக்குத்தான் தெரியும் பள்ளிப்பிரச்சினை

    Reply : 0       0

    atham kakaa Tuesday, 07 August 2012 05:18 PM

    ஆபத்து இல்லாட்டி என்னத்துக்கு பாதுகாப்பு வழங்கனும்?

    Reply : 0       0

    nila Wednesday, 08 August 2012 08:54 AM

    வைத்தியசாலை பொதுவானது அதில் அரசியல் பேச யார் இடமளித்தது?

    Reply : 0       0

    Ghafoor Wednesday, 08 August 2012 08:43 AM

    பதவிகாக இப்படியும் பேசலாமா?? ஆஷ்பத்திரியில் இஃப்தாருக்கு என்டு சொல்லி வந்தவர் பேசவேன்டிய விடயமா?????

    Reply : 0       0

    abdul hafeel Wednesday, 08 August 2012 07:15 AM

    சூப்பர் காக்கா,,,,,காக்கா சூப்பர்.பாதுகாப்பு பள்ளிக்கு மட்டும்தானா ஏன் பன்சலைக்கு இல்லையா?

    Reply : 0       0

    Akpiyaan Wednesday, 08 August 2012 07:10 AM

    Mali, அதாவுல்லா அமைச்சர் ஒரு இனவாதியோ.... பிர‌தேச‌வாதியோ....இல்லை.... நல்ல‌ அரசியல்வாதி..

    Reply : 0       0

    Akpiyaan Wednesday, 08 August 2012 06:58 AM

    இவ்வைத்தியசாலைக்கு ஒதுக்க வேண்டியதை உரியவர்கள் ஒதுக்க வேண்டும் அல்லது கொடுப்பவர்களை கொடுக்க விட வேண்டும்" என்றார்.

    Reply : 0       0

    RAMALAN Wednesday, 08 August 2012 06:14 AM

    தலைவா வாழ்க. இந்தமுறை ஹக்கீம் கிழக்கில ஏமாந்து போவார்??????????? கவலைப்பட வேண்டாம் தலைவா. உங்களுடைய வியூகம் அது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் வழியில் உள்ளது. அது நிலைத்து வாழும். அல்ஹம்துலில்லாஹ்!!!

    Reply : 0       0

    mr.razak Wednesday, 08 August 2012 12:01 AM

    வை

    Reply : 0       0

    Mali Tuesday, 07 August 2012 07:04 PM

    நீரோ பிடில் வாசித்த கதை. மனோ கணேசனுக்கு உள்ள இன உணர்வு கூட இவர்களுக்கு இல்லையே........

    Reply : 0       0

    mohamed Tuesday, 07 August 2012 06:22 PM

    சும்மா இருந்த பள்ளிகளுக்கு ஏன் பாதுகாப்பு தேவைப்பட்டதாம். இங்குள்ள பயங்கரவாதம் என்ன என அமைச்சர் விள‌க்குவார? டம்புள்ள பள்ளிக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்றவர் ஏன் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்? என்ன சார்?

    Reply : 0       0

    ariff Tuesday, 07 August 2012 06:12 PM

    கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியை எப்படி அரசியல் மயப்படுத்தினார்? தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஒரு பொது இடத்தை எப்படி பயன்படுத்த்லாம்? இப்தார் நிகழ்ச்சிக்கு யாரையும் அழைக்கலாம், ஆனால் அரசியல் பேச அங்கு அனுமதித்திருக்கக்கூடாது. அமைச்சர் கூறுகிறார் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பாம்..... யார் கொடுத்தது இவரா?

    Reply : 0       0

    saleem mohideen Tuesday, 07 August 2012 05:33 PM

    அதாவுல்லா நித்திரை கொள்கிறார் தட்டி எழுப்பி விடுங்கள்.

    Reply : 0       0

    UMARDEEN Tuesday, 07 August 2012 05:26 PM

    இவர் இப்படித்தான் சொல்லுவார். இவர் அரசாங்கத்தைக் குற்றமாகக் கதைத்தால் இவருடய குட்டை கலக்குப்படும்.அல்ஹம்துலில்லா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .