2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மரை இறைச்சி விற்றவருக்கு 20,000 ரூபாய் அபராதம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மரை இறைச்சி விற்பனை செய்தவரை 20,000 ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.முஹம்மட் பஸீல், வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.

அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆலையடிவேம்பு பிரதேச செயலப்பிரிவு பெரியகுளம், நாவற்காடு பிரதேசத்திலுள்ள வீட்டொன்றினை சுற்றிவளைத்து புதன்கிழமை (11) காலை தேடுதல் நடத்தினர்.  

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மரை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 03 கிலோகிராம் மரை இறைச்சியையும் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்டவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X