2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கும் ரூபாய் 10 ஆயிரம், ரூபாய் 7ஆயிரத்தி 500 அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் வியாழக்கிழமை(19) உத்தரவிட்டார்.


மேற்படி இருவரும், அக்கரைப்பற்று பொலிஸாரினால் புதன்கிழமை(18) கைதுசெய்யப்பட்டனர்.


குறித்த நபர்களை அக்கரைப்பற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் வியாழக்கிழமை(19) ஆஜர் படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X