2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியவருக்கு ரூ.17,500 அபராதம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 17,500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், திங்கட்கிழமை (23) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று, போக்குவரத்து பொலிஸாரால் குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (22) கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி அபராதத்தை செலுத்துமாறு உத்தவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X