2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 25 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு 7,500 ரூபாயும் மற்றொருவருக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் இன்று புதன்கிழமை (25)  உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த இருவரும் செவ்வாய்க்கிழமை (24) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இருவரையும் நீதவான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X