2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுவாட் அமைப்பினால் தளபாடங்கள் அன்பளிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 05 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் பால்நிலை வன்முறைகளை குறைப்பதற்கான செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணிக் காரியாலயத்துக்கு தேவையான ஒரு தொகுதி தளபாடம் மற்றும் காகிதாதிகளை சமூக நல்வாழ்வு அமைப்பினர் (சுவாட்) பிரதேச செயலக அதிகாரிகளிடம் பிரதேச செயலகத்தில் வைத்து புதன்கிழமை (04) கையளித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ரி.கமலநாதன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.கலீல், பிரதேச மகளிர் பிரிவு தலைமை முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.ஹஸன், சுவாட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் எஸ்.சுகந்தன் உட்பட பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X