Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மார்ச் 17 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 08 பேருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்;.எம்.பஸீல் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.
திருக்கோவில் பொலிஸாரும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்து திருக்கோவில், தம்பிலுவில் மற்றும் தாண்டியடி ஆகிய பிரதேசங்களில் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 08 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எச்.எம்.பஸீல் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்திய போதே இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட ஈட்டினை செலுத்துமாறு, ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
48 minute ago
2 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
03 Oct 2025