2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை அல்-இக்றஃ வித்தியாலயம், பிள்ளை நேய பாடசாலையாக தெரிவு

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் - இக்றஃ வித்தியாலயம் 2015ஆம் ஆண்டு தொடக்கம் பிள்ளை நேய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்தில் ஒரு முன்மாதிரியான பாடசாலையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை என்பவற்றை ஆராயும் பொருட்டு இன்று (18) புதன்கிழமை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். உவைஸ், அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸிம், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ. கஸ்ஸாலி ஆகியோர் விஜயம்செய்து குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன் தரம் ஐந்து மாணவர்களின் ஆக்கத்திலான கைவினை கண்காட்சியையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X