2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு

Sudharshini   / 2015 மே 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

போதைப்பொருள் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பாக  திவிநெகும பயனாளிகளுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று (26) கல்முனை-01ஆம் பிரிவில் இடம்பெற்றது.

திவிநெகும திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் வருடாந்தம் நடத்தப்படும் இக்கருத்தரங்கில், புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள்  பாவனை தவிர்ப்பு மற்றும் கொடி தினம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகின்றது.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சபாயாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக கல்முனை திவிநெகும வலய வங்கி  முகாமையாளர் ச.சதீஸ், திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌவ்சாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .