Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 27 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று செவ்வாய்க்கிழமை (26) தீர்ப்பளித்தார்.
குறித்த நபர்கள், திருக்கோவில் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று (26) ஆஜர் செய்தபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
இதேவேளை, ஆலையடிவேம்பு மற்றும் அறுகம்பை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பாவித்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் மூன்று நபர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதமும் மற்றைய இருவருக்கும் தலா 15,000 ரூபாய் அபராதமும் நேற்று (26) விதிக்கப்பட்டது.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago