2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவிக்காக ஆர்ப்பாட்டப்பேரணி

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்தும்  நியாயம் வேண்டியும்  அக்கரைப்பற்று  சக்தி மகளிர் சங்க அமைப்பின்; ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய  பேரணி இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமாகிய  பேரணி,  வம்மியடிப் பிள்ளையார் கோவிலைச் சென்றடைந்தது.  

'பாலியல் வன்முறை ஒழிக', 'பெண்கள் நாட்டின் கண்கள்', 'சட்டத்தரணிகளே வாதிடாதே', 'நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழக்குமா', 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்', 'சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்'  போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை  ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .