Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மே 30 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் 15 நாட்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 21 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை (28) தீர்ப்பளித்தார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரெருவர் திருக்கோவில் பிரதான வீதியில் மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்துள்ளார்.
இதன்போது அவரை கடந்த புதன்கிழமை (27) திருக்கோலவில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (28) ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago