2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒரு மாமனிதரே அமரர் சிகான் இராமச்சந்திரன்: வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்

Kanagaraj   / 2015 ஜூன் 06 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

மறைந்த சிறந்த மனிதருக்கு வழங்கும் அதியுயர்ந்த பட்டம் மாமனிதர். மாமனிதர் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை . அவ்வாறான ஒரு மாமனிதரே  அமரர் சிகான் இராமச்சந்திரன் அவர்கள் என திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில்    இன்று (06) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் சிகான் இராமச்சந்திரனின் முதலாவது வருட நினைவு தின நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்  அமரர் இராமச்சந்திரன் சிறந்த நற்குணமுள்ள பண்பாளன். அவ்வாறான பண்பாளன் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறு மறைந்த பின்பும் நம்மோடு வாழ்வதற்கு  காரணம் அவர் விட்டுச் சென்ற எச்சங்களும் ,சேவையுமே என்றார்.

கராத்தே கலை வெறுமனே சண்டை பயிற்சி கலை அல்ல. உளவள துறையோடு இணைந்த கலை. ஒவ்வொரு மாணவனும் மாணவியும் கற்கவேண்டிய கலை .ஒரு மனிதனை பண்பாளனாக, ஆராக்கியமுள்ளவனாக, நல்ல ஆளுமை உள்ளவனாக மாற்றும் கலை என்றார். ஆகவே அவர் வழிவந்த மாணவர்கள் பாண்பானவர்களாக  மாற்றம் பெற்றிருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றார்.

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின்  தலைவருமான அமரர் சிகான். கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்சி கே.கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்,   மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கம், கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ கராத்தே சங்க தலைவர் கே.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இங்கு நடைபெற்ற தரப்படுத்தல் பரீட்சையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கறுப்பு பட்டி மாணவர்கள் உட்பட அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0

  • kanapathipillai kuhakumararajah Saturday, 06 June 2015 11:57 PM

    Late Shihan Kanapathipillai Ramaghandran is a gentle man in the karate

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X