2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஜூன் 07 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

சாரதி அனுமதிப்பத்திரமின்றியும் தலைக்கவசம் அணியாமலும் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரெருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் 15 நாட்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார்.

அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், கடந்த வியாழக்கிழமை (04) நடத்திய திடீர் சோதனையின் போது அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் வைத்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பதுர் நகா பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அன்றைய தினம்(05) மதுபோதையில் கவனயீனமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரெருவருக்கு நீதிபதி 12,500 ரூபாய் அபராதமும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த 6 மாதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X