2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது: ஹரீஸ்

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித் 

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களின் பேரம்பேசும் சக்தியை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கக் கூடாது என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடத் திறப்பு விழா, நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  
'இன்று சில பேரினவாத கட்சிகள், 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்து அவர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்ய முயற்சிக்கும் நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என அவர் தெரிவித்தார். 
 
'இதற்கு எதிராக சிறுபான்மைக் கட்சிகள் செயற்பட்டாலும் அவர்களின் வினைத்திறன் மற்றும் ஆளுகைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை முன்னெடுத்துச் செல்வதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்' என அவர் தெரிவித்தார். 

'ஆனால், தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்தாலும் அவர்களுக்கான கடமைகள், பொறுப்புக்கள் மற்றுமு; அதிகாரங்கள் என்பன சட்ட ரீதியாக வழங்கப்படவில்லை. எனவே, ஜனாதிபதி இத்தேர்தல் முறை மாற்றத்தினை கொண்டுவர முனைவதை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை' என்றார்.
 
கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X