Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 09 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதேச செயலக கள உத்தியோகதர்களுக்கும் சமூகமட்ட அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கும் இடையிலான 'ஒன்றினைந்து பிரதேசத்தை கட்டியெழுப்புவோம' எனும் தலைப்பிலான ஒன்றுகூடல் நேற்று(8) கல்முனை அல்பஹ்றிய மகா வித்தியாலயயத்தில் இடம்பெற்றது.
இதில் சமுகமட்ட அமைப்புக்களுக்கும் கள உத்தியோகதர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் உறவுகள், ஒன்றிணைந்த பிரதேச செயற்பாட்டு முன்னெடுப்புகள், எதிர்கால செயற்பாடுகளுக்கான முன்மொழிவுகள் போன்ற விடயம்கள் தொடர்பாக கருத்துரைகள் பரிமாறப்பட்டன.
பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஹர்றப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் ஒன்றுகூடலில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி, பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கே.இராசதுறை, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எ.எச்.லாகிர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
25 minute ago
29 minute ago