2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மையவாடி அத்திபாரம் உடைப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 10 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  ஜெயிக்கா கிராமத்தில் மையவாடி எல்லைக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அத்திபாரம் இனந்தெரியாதோரினால் நேற்று   செவ்வாய்க்கிழமை  உடைக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் ஜெயிக்கா கிராம பள்ளிவாசல் நிர்வாகத்தினர்  தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கிராமத்தின் மேற்கில் சுமார் 6 ஏக்கரை கொண்டதாக  இந்த மையவாடி அமைந்துள்ளது. இதன் எல்லைப் பாதுகாப்புக்காக  தெற்கு எல்லையில் சுமார் 600 அடி நீளமான அத்திபாரம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியே உடைக்கப்பட்டுள்ளது.
இந்த மையவாடியின்  கிழக்கு எல்லை ஜெயிக்கா  கிராமத்தையும் ஏனைய மூன்று எல்லைகளும்  வயல் நிலங்களையும் கொண்டமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X