2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில் 

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் 2014ஆம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் சம்மாந்துறை எம்.ஏ.அப்துல் மஜீத் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார். 

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளின் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்களை கௌரவிக்கும் விழாவில் பாடசாலை மாணவர்களால் பல கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன. 

மேலும், அமைச்சர் மன்சூர், சம்மாந்துறை பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக எடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பாராட்டி சம்மாந்துறை கல்விச் சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிப் பணிப்பாளர்கள், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், இணைப்புச் செயலாளர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி, உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள், முக்கிய பிரமுகர்கள், வலயப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X