Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கையை ஆண்டு வந்து தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் காலமே அபிவிருத்திகளின் பொற்காலமாக அமைந்திருந்தது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பராஜா, புதன்கிழமை (01) தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் படுதோல்வியில் முடிந்தது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு இந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என்பது ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்தட்டங்களையே விழா எடுத்து திறந்து வைக்கின்ற நிலைமை இன்று காணப்படுகின்றது.
நாட்டிற்கு ஒரு தலைமைத்துவே வேண்டும். ஆனால், இன்று பல தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ்வை வெற்றிபெறச் செய்வதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். சந்தர்ப்பம் அமையுமாயின் தானும் மஹிந்த அணியில் களமிறங்கவுள்ளேன் எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
41 minute ago
52 minute ago