2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சதொச விற்பனை நிலையம் திறக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் லங்கா சதொச விற்பனை நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை வர்த்தக, கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  தலைவருமான ரிசாத் பதியுதீன் மேற்கொண்டுள்ளார்.

குறித்த இந்நிலையத்தை திறப்பதற்கு உத்தேசித்துள்ள அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கட்டடம் தொடர்பான  இறுதிக்கட்ட நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக லங்கா சதோச நிறுவனத்தின் பணிப்பாளர் சீ.எம்.முபீத், சதோச நிறுவனத்தின் செயற்பாட்டு உதவிப் பொது முகாமையாளர் ஏ.ரணசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால், பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எ.எல்.இர்பான், பொது முகாமையாளர் எம்.வஹாப் உள்ளீட்ட பலரும் குறித்த இடத்தை செவ்வாய்க்கிழமை (30) பார்வையிட்டனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் லங்கா சதொச விற்பனை  நிலையத்தை திறந்து தருமாறு பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் குறித்த சதொச நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை இன்னும் இரண்டு வார காலத்துக்குள் திறந்து வைக்கவுள்ளதாகவும் அதில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் சீ.எம்.முபீத் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .