Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 06 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்திகளுக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், சனிக்கிழமை (04) தெரிவித்தார்.
சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டடத்துக்கான நிதி; கையளிக்கும் வைபவத்தில் ஏற்பாட்டாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.
இந்நிகழ்வு, சம்மாந்துறை ஜம் இய்யத்துல் உலமாசபைக் கட்டடத்தில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்றது.
அங்க அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கமும் அதன் தலைமையும் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த அமைப்பாகவும் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்தியாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறான எமது தலைமைத்துவத்தின் சரியான வியூகத்தினாலும் முடிவுகளினாலும் தேசிய அரசியலில் காத்திரமான முறையில் எமது சமூகம் வழிநடாத்தப்படுகின்றன.
அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில தீய சக்திகளின் சதியே எமது கட்சியினையும் எமது கட்சியின் தேசிய தலைமையினையும் அவ்வப்போது விமர்சிக்கின்றனர்.
எவ்வாறு விமர்சனம் செய்தாலும் முஸ்லிம் சமூகத்தின் மூச்சாக இருப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமைத்துவமுமாகும் எனவும் தெரிவித்தார்.
ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டடத்துக்கான நிதி;யை கோரியபோது, தபால் தொலைத் தொடர்புகள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம், ஒரு மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் மேலும் 1.7 மில்லியன் ரூபாயை மிக விரைவில் வழங்கி வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருப்பதாக மாஹிர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .