Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜூலை 06 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை, கல்முனை வைத்தியசாலையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (03) காணாமல் போன 17 வயதான யுவதி நேற்று (04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு கடத்திச் சென்ற ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ. நஜீம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சம்மாந்துறை போரக் கோவில் வீதியைச் சேர்ந்த் உயர் தரம் கற்கும் யுவதியே காணாமல் போயுள்ளதாக அவரது தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கல்முனை ஜேசு ஜீவிக்கிறார் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக்குச் சென்று விட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருந்தெடுப்பதற்காக குறித்த மாணவியும் அவரது தாயும், தங்கையும், அயல்வீட்டில் வசிக்கும் சிறுவனும் சென்றுள்ளனர்.
அப்பொழுது வைத்தியசாலைக் காவலாளி எல்லோரும் உள்ளே செல்ல முடியாது சிகிச்சை பெறும் நோயாளியும் உதவிக்கு இன்னொருவர் மாத்திரமே உள்ளே செல்லலாம் என்று கூறியுள்ளார்.
அதன்படி தாயும் தங்கையும் வைத்தியசாலையின் உள்ளே செல்ல குறித்த யுவதியும் பக்கத்து வீட்டுச் சிறுவனும் வைத்தியசாலை வாயிற் கதவடியில் நின்றுள்ளனர்.
அப்பொழுது அங்கு நின்ற யுவதி சிறுவனும் அறியாத விதத்தில் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம் முறைப்பாட்டையடுத்து துரித விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த யுவதியை கண்டு பிடித்துள்ளதோடு ஆசிரியர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் யுவதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஏ. நஜீம் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஏ. நஜீம் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025