2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று திங்கட்கிழமை (06) தீர்ப்பளித்தார். 

இவரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்திருந்தனர்.

பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து குறித்த நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து 15 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

அத்துடன், தடை செய்யப்பட்ட கோல்சீல் ரக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 07 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .