Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித், ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இதனடிப்படையில் அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களாக அம்பாறைத் தொகுதியில் 160 நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 87 நிலையஙகளும், கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 464 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக அலுவலர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025