2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; ஒருவர் படுகாயம்

Thipaan   / 2015 ஜூலை 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் செவ்வாயக்கிழமை(07) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன், சிகிச்சைபலனின்றி  புதன்கிழமை (08) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்தன.

மோட்டார் சைக்கிளை செலுத்திய ஜூம்ஆ பள்ளி வீதி, தைக்காநகர்-16 ஆம் பிரிவைச்சேர்ந்த சுபைதீன் முகம்மட் பிர்னாஸ் வயது(23) என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில்  பின் இருக்கையிலிருந்து பயணித்த அதேபகுதியைச் சேர்ந்த அமீர் சாஜித் வயது (22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியின் தைக்காநகர் எனும் இடத்தில் இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .