Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 08 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக், 10,000 ரூபாய் சரீரப்பிணையில் இன்று புதன்கிழமை (08) விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளமையால் சில விடுதிகளில் சிறுசிறு கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர், பொத்துவில் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது 10 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்து இவ்வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தங்கல்லை பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago