2025 ஜூன் 26, வியாழக்கிழமை

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நிலை

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
13ஆம் திகதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளாக உள்ளபோதும் இதுவரையில் உறுதியான தீர்மானங்கள் எட்டப்படவில்லை என கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
 
மேலும், பலர் தேர்தல் களத்தில் குதிப்பதற்கு தயராகிவரும் வேளை தலைமை வேட்பாளர் தொடர்பிலும் சர்ச்சை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கடந்த நாட்களில் வெளிவந்த பத்திரிகை செய்திகளின் படி இருவரது பெயர்கள் தலைமை வேட்பாளர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறாயினும், பல முக்கியஸ்தர்கள் களமிறங்கும் இத்தேர்தலில் யாரை தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய தழிரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, 'வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவே முடிவெடுக்கும்' எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .