Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 09 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
அரசியல் அநாதையான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பொத்துவிலின் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் மௌலவி ஏ.முகைதீன் பாவா, நேற்று புதன்கிழமை (08) தெரிவித்தார்.
திகாமடுல்ல தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கரையோர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித்தை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்குவதற்கான முடிவினை சிறிகொத்தா அரசியல் வட்டாரம் நேற்று எடுத்துள்ளது.
இம்முடிவினை ஆதரித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் பொத்துவில் பிரதேசத்துக்கு மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களையும் ஒன்று சேர்த்து தலைமைத்துவத்தின் வழியில் கொண்டு செல்லக்கூடியவர்.
இத்தகைய ஒருவரை இம்முறை பொதுத்தேர்தல் வேட்பாளராய் நிறுத்தியமை குறித்து சிறிகொத்தாவுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த 100 நாட்கள் திட்டத்தில் பொத்துவிலுக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து என்பன பற்றிய திட்டங்களை பிரதமர் ரணிலிடம் முன்வைத்திருந்தவர் எம்.அப்துல் மஜித். நாடாளுமன்ற உறுப்பினராய் பொருத்தமானவரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பொத்துவில் மக்கள் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலில் ஒன்றுபடுவோம் என அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago