2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திரியபியச வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் திரியபியச  வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வு, கல்முனை 03ஆம் பிரிவில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையுடன்  மேட்கொள்ளப்படும் இவ்வீட்டுத்திட்டத்துக்கு திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினூடக தலா 75,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச சமுக அபிவிருத்தி பிரிவினால் மேலதிக  நிதிகளும் ஒதுக்கப்பட உள்ளன.

கல்முனை பிரதேச திவிநெகும சமுக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  என்.எம்.நௌவ்சாத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் ஹனி, பிரதேச திவிநெகும அதிகாரி எ.ஆர்.எம்.ஷாலிஹ் உட்பட திவிநெகும அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .