2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் விநாயகபுரம் சக்தி வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ரி.புஸ்பராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோனின் ஆலோசனைக்கு ஏற்ப பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேற்படி நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

இதன்போது போதைப்பொருள் பாவனைகள் அதன் பாதிப்புக்கள், சட்ட ரீதியான பிரச்சினைகள் மற்றும் சமூக சீர்கேடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பொலிஸாரினால் தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .