2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிட தீர்மானம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் பங்காளிக் கட்சியாக போட்டியிடவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில், இராஜகிரியவிலுள்ள கட்சித்  தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை  இரவு (08) நடைபெற்றது.

பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து போட்யிடுவதா  அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு எடுத்த முடிவின்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில்  போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக பொத்துவில், சாம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் மூன்று வேட்பாளர்களை நிறுத்தவதற்கும் தீர்மானிக்கப்பட்டுளள்தாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .