Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தொகுதிகளில் ஆளுமை கொண்ட புதியவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (10) ஜூம்மா தொழுகையின் போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றில் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் பதவியின் அதிகாரத்தினை மக்களுக்காகப் பயன்படுத்த தவறியவர்களை ஓரங்கட்ட வேண்டுமென்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவதுக்கோர் அன்பான வேண்டுகோள்' எனும் தலைப்பில் 'முஸ்லிம் காங்கிரஸை நேசிக்கும் அஷ்ரப் அபிமானிகள்' எனும் பெயரில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்ரும் பொதுத் தேர்தலில் சவால் மிக்கதொரு தேர்தல் களமாக அம்பாறை மாவட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. யாரை களமிறக்கினால் வாக்காளர்களைக் கவரலாம் அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கலாம் என்பதில் கட்சிகளுக்கிடையில் பெரும் பரபரப்பு நிலை காணப்படுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் மத்தியில் அதிகூடிய செல்வாக்கு மிக்க கட்சியான காங்கிரஸிலும் இந்நிலை மேலோங்கியுள்ளது.
முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்;, ஒரு கொடியின் கீழ் இணைக்கப்பட வேண்டும்; அதன் மூலம் ஒரு அரசியல் பலம் இச்சமூகத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு மறைந்த தலைவர் அஷ்ரப் இக்கட்சியை ஸ்தாபித்து வெற்றி கண்ட வரலாற்றை மீளவும் மீட்டிப் பார்க்க வேண்டிய தேவை இல்லை.
இருப்¬பினும், தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த மக்கள் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளால் பல்வேறு விடயங்களில் ஏமாற்றப்பட்டமை, அவர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் என்பன முஸ்லிம் காங்கிரஸினை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாக்களித்த மக்களுக்கு ஒன்றுமே செய்யமுடியாத கையாலாகாத நிலையில் தங்களது பதவிகளை மாத்திரம் அலங்கரித்துக்கொண்டு இருகின்றார்கள் என்பதை இப்பிரதேசங்களிலுள்ள பாதைகளையும் பாடசாலைகளையும் அவதானிக்கும் போது காணமுடிகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றுமொரு பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்குத் தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி அவர்கள் வெற்றிபெற்ற பின் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட தவறுவதனால், மக்கள் அவர்கள் மீது வெறுப்புக்கொண்டுள்ளதோடு அவர்கள் மீதான நம்பிக்கையையும் இழந்துள்ளனர். இந்த நிலைமையினை அம்பாறை மாவட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது என்பதை தலைமைத்துவத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago