2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாணவியைக் காணவில்லை என்று பாட்டி, முறைப்பாடு

Gavitha   / 2015 ஜூலை 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியை, சனிக்கிழமை (11) முதல் காணவில்லை என்று கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் அசோக்குமார் ஜீவிதா (வயது 16) எனும் மாணவி தனது பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் அவரை சனிக்கிழமை பிற்பகலிலிருந்து காணவில்லை என்றும் குறித்த மாணவியின் பாட்டி சோமசுந்தரம் பரமேஸ்வரி (வயது 63), தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் போயுள்ள மாணவிக்கு பெற்றோர் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .