2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஜே.வி.பி.யின் வேட்புமனு தாக்கல் நாளை

Princiya Dixci   / 2015 ஜூலை 12 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடவுள்ளதாக முன்னணியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ தெரிவித்தார்.

இதற்கான வேட்பு மனு நாளை திங்கட்கிழமை (13) தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் இரு முஸ்லிம்களும் எட்டு சிங்களவர்களும் போட்டியிடவுள்ளதாகவும் அதில் மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.அபூசகிட், சம்மாந்துறைப்பிரதேச அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .