2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 13 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாகக் கூறப்படும் யாழ். பருத்தித்துறையை சேர்ந்த 34 மற்றும் 22 வயதுகளையுடைய  இருவரை இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு  கிடைத்த தகவலை தொடர்ந்து இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

நண்பர் ஒருவரின்  வீட்டில் நடைபெறும் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வந்ததாகக் கூறிய இவர்கள் இருவரில் ஒருவர், ஏற்கெனவே சிறையில் இருந்தவர் என்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து   தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .