2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கு மகாண அமைச்சர் இராஜினாமா

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கிழக்கு மகாண அமைச்சர் எம்.எம்.மன்சூர் தனது அமைச்சர் பதவியையும்  உறுப்பினர் பதவியையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், சம்மாந்துறைத் தொகுதியில் போட்டியிடுவதாயின் தனது அமைச்சு பதவியையும் உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் தனது இராஜினாமா  கடிதத்தை தலைமைத்துவத்திடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

இதவேளை இவரின் அமைச்சு பதவியும் உறுப்பினர் பதவியும் கடந்த கிழக்கு மகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு தற்போதய காத்திருப்போர் பட்டியலில் உள்ள  சம்மாந்துறை  தொகுதியைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிருக்கு  வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .