Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 14 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
கடந்த யுத்த வடுக்களிலிருந்து அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இன்னும் மீளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (13) தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அபிவிருத்திகள், வாழ்வாதார உதவிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் வகையில் குற்றவாளிகளை கண்டறிவதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளேன்' என்றார்.
'மேலும், பாட்டன், தந்தை விட்டுச்சென்ற இடத்திலிருந்து தமிழ் மக்களுக்கான பணிகளை நான் தொடரவுள்ளேன். எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழ் மக்களின் கைகளில் உள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025