Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 14 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது.
அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் மழைகாலத்திற்கு முன்பு, வடிகான்களை துப்பரவு செய்து வெள்ள நீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், வடிகான்களுக்கு பாதுகாப்பு மூடி இடல், அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகில் காணப்படும் மீன் விற்பனையை வேறு இடத்திற்கு மாற்றுதல், ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் மீன் கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்களை இருவார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,
அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள், சுற்றாடல் அதிகாரசபை உயர் அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், கிராம சேவையாளர்கள், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன், உதவிப் பிரதேச செயலாளர் ரி. அதிசயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago