2025 ஜூன் 25, புதன்கிழமை

இருப்பை பாதுகாக்கவேண்டும்: நஸீர்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சில்லறைக் கட்சிகளுக்கு வாக்களித்து மிகவும் பெறுமதி வாய்ந்த வாக்குகளை வீணாக்காமல்,  முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமது இருப்பு, சுயமரியாதை,கௌரவம் ஆகியவற்றை  பாதுகாக்கமுடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன நஸீர் அஹமட் தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க பிரதமராவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்எம்அஷ;ரப் எவ்வாறான சாணக்கியத்தை கையாண்டு முஸ்லிம் காங்கிரஸை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றினாரோ, அதே வழியை இம்முறை பொதுத்தேர்தலில் கையாண்டு ரணிலை பிரதமராக்கும் சாணக்கியத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக  திங்கட்கிழமை  (13) கருத்து வெளியிட்டபோதே,  அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இது தொடர்பில்  மேலும்  தெரிவித்த அவர்,  'சில்லறைக் கட்சிகளுக்கு வாக்களித்து மிகவும் பெறுமதி வாய்ந்த வாக்குகளை வீணாக்காமல்,  முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமது இருப்பையும் சுயமரியாதையையும் கௌரவத்தையும்  பாதுகாக்கமுடியும்.

எனவே, அனைவரும் ஒற்றுமைப்பட்டு சில்லறைக் கட்சிகளையும் அதில் முகம் காட்டும் சந்தர்ப்பவாத வேட்பாளர்கள்,  அரசியல்வாதிகளையும் தூக்கி வீசிவிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு குரல் கொடுத்து எமது தேவைகளை நிமிர்ந்து நின்று பெற்றுக்கொள்வோம்'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .