2025 ஜூன் 25, புதன்கிழமை

'கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை' அங்குரார்ப்பணம்

Thipaan   / 2015 ஜூலை 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த இரண்டு வருடங்களாக பல சமூக சேவை நிகழ்வுகளை முன்னெடுத்து வந்த 'கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை' உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை மாலை (14) நடைபெற்றது.

இதில் அம்பாறை. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள், பகுதித் தலைவர்கள், விரிவுரையாளர்கள், கல்விக் கல்லூரி ஓய்வு பெற்ற பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அமைப்பு சம்பந்தமாக பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் எதிர்வருங்காலங்களில் தேவைக்கேற்ப அமைப்பில் மாற்றங்கள் கொண்டு  வருதென்ற ஏகோபித்த தீர்மானத்துக்கமைய நிர்வாகத்தெரிவு இடம் பெற்றது.

இங்கு அமைப்பின் தலைவராக தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்சேய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.இவருடன் 21 பேரைக்கொண்ட நிர்வாக சபையும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .