2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆளுமையுடைய அரசியல் தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் நியாயபூர்வமாக சிந்தித்து சோரம் போகாத சிறந்த ஆளுமையுடைய அரசியல் தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய வேண்டுமென்று அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் ரி.கலையரசன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு  நேற்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் கடந்தகால படிப்பினையை  சிந்திக்கவேண்டும்.  இம்மாவட்டத்தில் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாமை பெரும் குறையாக உள்ளது. எனவே, இது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .